Wednesday, July 13, 2011

தென்றலின் தேசம்! ஈ.விஜய்,கொட்டாரம்

இந்தியா தூங்கினால்
தூங்கட்டும்...யுத்தங்களே!
இங்கே விழிப்பதற்கு வேண்டாம்
வெடிகுண்டுச் சத்தங்களே!

திருவுடைய பாரத த்தைத்
துண்டுத் துண்டாய்த் துணிப்பதென்றால்
அதுவன்றோ அதுவன்றோ
அபத்தம்!

துண்டு துண்டாய்
பெட்டிகளைத் துணித்தால்
அது தொடர்வண்டி அல்ல
தொலைந்த வண்டி என்றே அர்த்தம்!

தெலுங்கு தென்றல்
தேவையென்ன?
தேசம் முழுக்க
ஒரே தென்றல்!
சீர்கொண்ட தமிழ்நாடு

நெஞ்சறியப் புரியவில்லை துரோகம்..!
சிறுபிழை பொறுத்துவந்து
சிரித்தாலென்ன முல்லைந தி!

கன்னட நாட்டினிலே
கால்விலங்கு பூட்டாதே
தென்னகன் குலமகளே
காவிரியே வந்தாடு!

அழகின் உச்சகட்டமாய்
உயர்ந்து நிற்க
குளிர்கால கவிதைபாடி வரவேண்டும்
காஷ்மீரக் குன்றுகள்!
ஆப்பிள் சிவப்பே
அதிகமங்கே!
இரத்தச் சிவப்பு
இன்னும் எதற்கு!

காயம்பட்டுத் தவிக்கும் அந்த
காஷ்மீரத்துப் பள்ளத்தாக்கை
இனி
இரத்தத்தால் அல்ல!
குயில்களின் இன்னிசையால்
மட்டுமே நரப்பவைப்போம்!
துகிலுறியும் துச்சாதனக்
கூட்டத்துக்கு எதிராய் மகாபாரதம்
உடனே தொடுப்போம்!

ரத்தத்தில் பால்பொழியும்
நம்பிக்கைகளோடு பால்பொழியும்
நம்பிக்கைகளோடு நாளைய பாரதம்
நமக்கெனப் படைப்போம்!,



















!

Friday, July 8, 2011

தமிழ் சிற்றிதழ்கள்-ஒரு பார்வை.

1.புதிய ஆசிரியன்.
1985ல் பள்ளிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் அவல நிலைகளை போக்கிட பல்வேறு சங்கங்கள் இணைந்து ஜாக்டீ பேரமைப்பாக உருவாக்க கருத்துப் போர்வாளாக மலர்ந்ததுதான் 'புதிய ஆசிரியன்' மாத இதழ்.தொடர்ந்து தமிழகமெங்கும் கல்விச் சூழல் குறித்தும் அரசியல் பொருளாதாரம் அறிவியல் சார்ந்த சிந்தனைப் பொறிகள் இலக்கிய வாகனத்தைப் பயன்படுத்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.அதில் த மு எ க ச எழுத்தாளர்கள் பலர் படைப்பு பங்காற்றி வருகிறார்கள்.பட்டுக்கோட்டையாரின் பாடல் போல பாமரனுக்கும் எளிதில் புரியும்படியான கதைகளும் கட்டுரைகளும் உள்ளடக்கி வரும் முற்போக்கு இதழாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
வண்ணக்கதிர்.
 தீக்கதிரின் இலவச இணைப்பான வாராந்திர இதழ் வண்ணக்கதிர் சிறுகதைகளும் கட்டுரைகளும், ஹைக்கூகளும் தாங்கி வருகிறது.மூடநம்பிக்கை எதிர்ப்பு சகல துறைகளிலும் கால்பதிக்கும் கள ஆய்வு கூறுகள், கூடவே குழந்தைகள் பூங்கா என்ற பகுதியில் குட்டிக்கதைகளும்,சிந்தனைக்குறிய சிறு பாடல்களும் இதழை அலங்கரிக்கின்றன. 15 பக்கங்கள் கொண்ட இவ்வண்ணக்கதிர் குறுகத் தரித்த வீரியமுள்ள குறளாக பவணிவருகிறது
2.சிறுவர்மணி
 குழந்தை இலக்கிய வரட்சியை தினமணி நாளேடு தனது வாராந்திர இலவச இணைப்பாக வெளியிடும் 'சிறுவர் மணி' போக்குகிறது. அழகிய பாடல்களும் அறிவியல் அறிஞர்களைப் படக்காட்சிகளாக விளக்கி குழந்தைகளோடு நெருங்கி நிற்கிறது. டி வி யின் ஆதிக்கத்தில் குடும்பங்களில் இப்புத்தகத்தை புரட்டிப் பார்ப்பவர் அருகிப் போயிருக்கிறார்கள்.
3.தினமணிக்கதிர்.
தினமணியின் இலவச வாராந்திர இதழான 'தினமணிக்கதிர்'இதழ் பெரும்பாலும் சிறுகதைகளும் கட்டுரைகளும் தாங்கி வருகிறது. அமெரிக்காவிற்கு அடிபணிய மறுக்கும் இந்திய விஞ்ஞானியை கடைசியில் தன் வலையில் சிக்கவைக்கும் ஏகாதிபத்திய நரித் தந்திரத்தை சுட்டுவதாக அமைந்தது 'சக்கரவியூகம்' கதை.மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் சேரத்துடிக்கும் ஏழைகளின் ஏக்கத்தை வெளிப்படுத்தும். 'கட்டணம்' கதை த மு எ க ச குமரி மாவட்டக் குழு உறுப்பினர் மிக்கேல்ராஜ் எழுதியது. ஜோசியம் ஒரு மூடநம்பிக்கயை மூலதனமாக் கொண்டு பிழைப்பு நடத்தும் குருக்கள்,குடிகாரனைத் திருத்துவதற்காக அதைப் பயன்படுத்தும் மனோ ரீதியே 'மந்திரம் கால் மதி முக்கால்' என்ற பழமொழியை உண்மையாக்கிய 'விதைபுதிது' சிறுகதைகள் பேசப்படக் கூடியவை.நடிகர் ராஜேஸ் 'முரண்சுவை' சிறுகட்டுரைத் தொடர் ரசிக்க சிந்திக்க வைத்தவைகளாக அமைந்துள்ளன.
4..'குமுதம் தீராந்தி'
குமுதம் ஏடு வர்த்தகரீதியாக பல பெயர்களின் துணை ஏடுகள் வெளிட்டாலும் அழுத்தமான இலக்கிய சர்ச்சை முகத்தோடு 'குமுதம் தீரா ந்தி' யை ஓடச்செய்கிறது. இவ்விதழில் வெளிவரும் கவிதை ஜாம்பவான்களின் கவிதைகள் குறைந்தபட்சம் ஐந்துமுறை படித்தால்தான் உள் அர்த்ததை புரியமுடியும். இலக்கிய உலகில் மிகப் பிரபலமாக அறிமுகமாகியுள்ள 'கலை கலைக்காகவே' கலை மக்களுக்காகவே ' சித்தாந்தங்கள் அடங்கிய படைப்பாளர்களின் படைப்புகளையும் நேர்காணலையும் வெளிப்படுத்தி வருகிறது.விவாதங்கள் கூர்மையாக வைக்கப்படுகிறது.
5.திசைஎட்டும்
  இலக்கியப் படைப்புகளை பல மொழி வாகனங்களில் ஏற்றி மிகப் பரபலமாக இலக்கிய வாசகர்கள் மனதில் இடம் பெற்றிருக்கூடிய எழுத்தாளர்களின் சிந்தனைகளை பந்திவைக்கிற தன்மையைக் கொண்டு மொழியாக்கக் காலாண்டிதழாக  மொழிபெயர்ப்பு இலக்கியவிமர்சகர் குறிஞ்சிவேலனின் வெளியீட்டில் 'திசை எட்டும்' இதழ் படிப்பாளிகளை உயர்த்தும் ஏடாக வந்து கொண்டிருக்கிறது.ஆங்கிலம், வங்காளி,மலையாளம்,கன்னடம் தெலுங்கு இந்தி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்களை ஆசிரியர் குழுவில் சேர்த்து'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செலவங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற பாரதியின் அறைகூவலை நனவாக்கிவருகிறது.
6.புது எழுத்து
நவீட படைப்பிலக்கியத்திற்கான சிறு பத்திரிக்கை என்ற அடையாளத்தோடு காலாண்டிதழாக 'புது எழுத்து' மனோன்மணியை ஆசிரியராக கொண்டு,இரா.சுகவனம் பதிப்பாசிரியராகவும் கொண்டு வெளிவருகிறது இப்பத்திரிக்கை.2011ல் வெளிவந்த 19வது இதழில் லாவண்யாவின் 'வணிக கலாச்சாரமும் மக்கள் நலமும்' கட்டுரை இந்தியாவில் ஏகாதிபத்தியத்தின் ஊடுருவலை விவரிக்கிறது. கார்பரேட் கிரிமினல்களின் வாழ்க்கைத் த்ததுவமே பெரும்பான்மை மக்களை சுரண்டுவதுதான். அதற்கு தகுந்தாற்போல இந்தியர்களின் வாழ்முறையை, சட்டங்களை அணுகுமுறைகளை,பொருளாதாரத்தை பலங்களை, கலாச்சாரங்களை ஊடகங்கள்,சினிமா,நீதித்துறை அரசு எந்திரம் மூலம் மாற்றுவற்காகச் செய்யும் முயற்சிகள் உள்ளடக்கிய கோஷம்தான் தாராளமயமாதலும்,உலகமயமாதலும் பன்னாட்டு வணிக படையெடுப்பும்' என்று சரியாக சித்தரிக்கிறது. சல்மான் ருஷ்டியின் 'மகத்தான திரும்புதல் குறித்து ஓர் கனவு என்ற நாட்குறிப்பு கட்டுரை, 'ஒரு நூற்றாண்டு காலத் தனிமை' (காப்ரியேல் கார்சியா மார்க் வெஸின் கதை),'நாடுவிட்டு நாடு ' தன் வரலாற்று புனைகதை, 'பாபாசாகேப்  படம் எடுத்தேன்'  ஜப்பார் பட்டேலின் பேட்டி ஆகியவை  குறிப்பிடத் தக்கவை
7.செம்மலர்..
   இடதுசாரி அரசியல் பின்புலத்தோடு மக்களின் வாழ்க்கையோடு நெருங்கி, சோசலிச எதார்த்தவாத இலக்கிய கொள்கையை அடித்தளமாக வைத்துக்கொண்டு,கலை இலக்கியம்,அரசியல்,விஞ்ஞானம் ஆகிய தளங்களில் கால்பரப்பிக்கொண்டு படைப்புகள் வாசகர்களை எவ்வித குழப்பத்திலும் ,மயக்கத்திலும் ஆழ்த்தாமல் சிந்தனைப் படைப்புகளில் பவணிவருகிறது செம்மலர் மாத இதழ். இளம் படைப்பாளர் முதல் முதுபெரும் படைப்பாளர்களின மேடையாகத் திகழ்கிறது.
8.தாமரை.
   மக்கள் கவிஞர் ஜீவானந்தம் ஆரம்பித்து இன்னும் இடதுசாரி அரசியல் தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிற 'தாமரை' மாத இதழ் புதுப் படைப்புகளின் ஆய்வு, நூல் அறிமுகம் இலக்கியக் கட்டுரைகள்
9.






'