Wednesday, July 13, 2011

தென்றலின் தேசம்! ஈ.விஜய்,கொட்டாரம்

இந்தியா தூங்கினால்
தூங்கட்டும்...யுத்தங்களே!
இங்கே விழிப்பதற்கு வேண்டாம்
வெடிகுண்டுச் சத்தங்களே!

திருவுடைய பாரத த்தைத்
துண்டுத் துண்டாய்த் துணிப்பதென்றால்
அதுவன்றோ அதுவன்றோ
அபத்தம்!

துண்டு துண்டாய்
பெட்டிகளைத் துணித்தால்
அது தொடர்வண்டி அல்ல
தொலைந்த வண்டி என்றே அர்த்தம்!

தெலுங்கு தென்றல்
தேவையென்ன?
தேசம் முழுக்க
ஒரே தென்றல்!
சீர்கொண்ட தமிழ்நாடு

நெஞ்சறியப் புரியவில்லை துரோகம்..!
சிறுபிழை பொறுத்துவந்து
சிரித்தாலென்ன முல்லைந தி!

கன்னட நாட்டினிலே
கால்விலங்கு பூட்டாதே
தென்னகன் குலமகளே
காவிரியே வந்தாடு!

அழகின் உச்சகட்டமாய்
உயர்ந்து நிற்க
குளிர்கால கவிதைபாடி வரவேண்டும்
காஷ்மீரக் குன்றுகள்!
ஆப்பிள் சிவப்பே
அதிகமங்கே!
இரத்தச் சிவப்பு
இன்னும் எதற்கு!

காயம்பட்டுத் தவிக்கும் அந்த
காஷ்மீரத்துப் பள்ளத்தாக்கை
இனி
இரத்தத்தால் அல்ல!
குயில்களின் இன்னிசையால்
மட்டுமே நரப்பவைப்போம்!
துகிலுறியும் துச்சாதனக்
கூட்டத்துக்கு எதிராய் மகாபாரதம்
உடனே தொடுப்போம்!

ரத்தத்தில் பால்பொழியும்
நம்பிக்கைகளோடு பால்பொழியும்
நம்பிக்கைகளோடு நாளைய பாரதம்
நமக்கெனப் படைப்போம்!,



















!

No comments:

Post a Comment