Sunday, July 15, 2012

தேவதையும் இல்லை தெய்வமும் இல்லை

தேவதையும் இல்ல தெய்வமும் இல்ல மனுஷிதானம்மா நீ
பெண்ணின் குணமென சொன்னவையெல்லாம் பழமைவாதிகளின் பொய்
கொஞ்சம் நிமிரவும் சொஞ்சம் திமிரவும் தோழிவாராய் மூன்றாம் போராய்

நிலவென்று போற்றி கவிதைகள் சொல்லியுன்னை
துணிகள் துவைக்க விட்டானே
மலரென்று கொஞ்சி மிகழ்ந்தவனுன்னை
சமையலறையில் நட்டானே
தலையில்மட்டுமா நேர்கோடு
வளைவுகள் எதற்கு வாழ்வோடு
நெஞ்சம் வேண்டும் நெருப்போடு
அன்பால் செய்து தந்தால் என்ன
திரிய வேண்டுமா விலங்கோடு
சமத்துவக் கொள்கையில் ஒத்துப்போகிற
கணவனோடு நீ கருத்தறி - இனி
பிள்ளைகள் பெறவே பெண்னென்றால்-உன்
கர்ப்பப் பையினை அறுத்தெறி                 (தேவதையும் இல்ல)

மதமெல்லாம் கூடி மடமைகள் செய்துன்னை
அடிமைப் பொருளென வைத்ததம்மா
பக்தியில் நீயும் ரெக்கையை மறக்க
மண்ணுக்ககுள்ளேதான் புதைத்தம்மா
என்ன ஆடை உடுத்த வேண்டும்
என்ன வேலை பார்க்க வேண்டும்
நீயே முடிவை எடுக்கணும்
உரிமைச் சாவி எவன் கொடுப்பது
நீதான் பூட்டை உடைக்கணும்
கால காலமாய் காத்து வந்ததால்
உன்னதுதானே நெருப்பு-உன்னை
அடிமை செய்திடும் கொடிய மிருகத்துக்கு
கொள்ளி வைப்பதுன் பொறுப்பு.         (தேவதையும்)
                                                                           கவிஞர் ஏகாதேசி

No comments:

Post a Comment