Friday, November 25, 2011

உயிர் குடிக்கும் ராஜநாகம்.


ஐந்தாண்டுகளுக்கு முன்பு
அரைகுறையாக அடிபட்டு
மயங்கிக் கிடந்த ராஜநாகப்
பாம்பொன்று-
அனுதாபக் காற்றைக் குடித்து
கோட்டைப் புத்துக்குள் குடியேறியது!
பாதிப்பின் பலமிருக்குமென
அறியாமை மக்களின்
பரிதாபப் பாலூட்டல்!
பூசாரிகளின் உச்சாடனம்
வேள்வி மந்திரம்-கூடவே
டாஸ்மாக் ருசியும் கண்டு
தெனாவெட்டு ருத்திரதாண்டவத்தோடு
பள்ளிக்கூடம் பக்கம் பதுங்கியது!
மாணவர்களின் அணிசேர்க்கை
விரட்டியபோது
பக்கத்துப் புதருக்குள் மறைந்தது!
பூச்சிகள் கிடைக்காமல்
பால் பண்ணை பக்கம் ஊர்ந்து
பாலை நக்கியபோது
விஷத்தைக் கக்கியது!
ஊரெங்கும் குழந்தைகள்
கொத்தக் கொத்தாய் செத்தன!
தப்பயோடிய பாம்பு
டிப்போவில் நின்ற பஸ்ஸில்
டிரைவர் சீட்டின்கீழ் பதுங்கி
நெரிசல்வேகப் பயணத்தில்
டிரைவர் காலில் பதம்பார்த்தது!
அலறித்தடித்து ஹேண்ட்பார் கை
தடுமாறி
ரோட்டோரம் இருந்த கிணற்றில் பாய்ந்து
பயணிகள் அனைவரும் ஸ்பாட் அவுட்!
ஏராளம்பேரின் உயிர்குடித்த ராஜநாகம்
மின் அலுவலகத்தில் பில் கவுண்டரில பதுங்கியது!
பணம் கட்ட வந்தோரை சீண்டியது
அலுவலர்களும் பயணாளிக கூட்டமும்
பட படத்து பயந்தோடினர்!
நொடிப் பொழுதில் மறைந்து
கோட்டைப் புத்தில் ஒழிந்துவிட்டது!
மரண ஓலக் கதறல் கேட்ட
மனச் சாட்சி கொண்டோர்
கடப்பாரை மம்பட்டியோடும்
பாம்பைப் பிடிக்க
கோட்டைப் புத்தைச் சுற்றி
கோபாவேஷத்தோடு!

No comments:

Post a Comment