Tuesday, November 8, 2011

பாட்டாளி வர்க்க வெற்றி சர்வநிச்சயம் - கவிஞர் ஈகிள் விடெப்ஸ்.

தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்,எழும்.
வடுபடும்,மறுபடியும் எழும்.
அதன் குரல்வளை நெறிக்கப்படும்
உணர்வற்றுப் போகும் வரை
தொண்டை அடைக்கப்படும்.
நீதிமன்றம் கேள்விக் கணைகளைத் தொடுக்கும்.
பத்தரிக்கைகளால் வசை பாடப்படும்
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்.
கோழைகளால் நடுவீதியில் வீசப்படும.
பொதுமக்களின் புருவ நெறிப்பும்கூட
 போர்தொடுக்கும் அரசியல் வாதிகளால் ஏய்க்கப்படும்.
ஓடுகாலிகளால் மறுப்புரைகள் கூறப்படும்

சூதாடிகளால் தோற்கடிக்கப்படும்.
அட்டைகளால் உறிஞ்சப்படும்.
ஏன்....தலைவர்களால் விற்றுவிடப்படும்
ஓ...இத்தனை சோதனைகள்
இருந்த போதிலும்
இவ்வுலகம் இதுவரை காணாத
உன்னதமான இயக்கம்
தொழிலாளர் இயக்கம் ஒன்றுதான்
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டிருக்கும்
பாட்டாளி மக்களை விடுதலை செய்வதே
அதன் வரலாற்றுக் கடமையாகும்
அதன் வெற்றி சர்வ நிச்சயமே!

                                                   'தி மெட்டல் ஒர்க்கர்ஸ்' இதழ் 1904
                                                           கவிஞர் ஈகிள் விடெப்ஸ் ஆங்கிலக் கவிதை.

1 comment:

  1. தோழர் கணேசன் அவர்களே! சங்கப்பாடல் ஒன்று என்ற தலைப்பில் மெட்டல் ஒர்க்கர் பத்திரிகையில் வந்த இந்தக்கவிதையின் பிறிதொரு பதிவு இதோ:
    http://sugadevnarayanan.blogspot.com/2011/06/blog-post.html

    ReplyDelete