Tuesday, May 8, 2012

இக்காலத்திற்கும் பொருந்தும் பழைய பாடல்

பழைய திரையிசைப் பாடல் ஒன்று திருச்சி லோகநாதனின் இனிமையான குரல்வளத்தில் அமையப்பெற்றது. 1955ல் வெளியான படத்திற்கு கு ம பாலசுப்ரமணியம் எழுதியது.இசையமைப்பாளர் சி.ராமச்சந்திராவின எளிமையான இசையில் தவழந்துவந்துள்ளது.இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது இருபகுதி மக்களில் பெண்கள் சூரையாடப்பட்ட அவலம் உட்பட குழந்தைகள் அநாதைகளாக ஆக்கப்பட்ட கொடூரம் கவிஞரின் உள்ளத்தை பாதித்திருக்கவேண்டும்.தேச்ப்பற்றை நேர்த்தியாகவே திரைக்கதையாக வடித்து மக்களின் மனதில் ஒற்றுமையை விதைத்த அற்புத காலமது. மதவெறி சிந்தனை இன்னும் மறையாமல் இருப்பதாலும் கூடவே அரசியலிலும் கலந்து நாற்காலிக்குத் துடிக்கும் இக்காலத்திற்கும் பொருந்துவதாகவே உள்ளது. எழுதிய கவிஞர் யாரென்றும் தெரியவில்லை. பாடல் இதுதான்.
மாநிலமே சில மானிடரால் என்ன
மாறுதல் பாரய்யா-மனிதன்
மாறியதேனய்யா
வானத்துநிலவில் ஆதவன் திசையில்
மாறுதல் ஏதய்யா-மனிதன்
மாறியதேனய்யா              {மாநிலமே}
மண்ணில் பலவித பிரிவினையாலே
மனிதன் மிருகமாய் ஆனதனாலே
என்னே கொடுமை எங்குமிந்நாளே
வீணர்கள் தாண்டவம் பேய்களைப் போலே
அனபையும் பண்பையும் தன்னலத்தால்
பலியாக்கிடும் பேதையாய்-மனிதன்
மாறியதேனய்யா-                   {மாநிலமே}
ஈஸ்வர அல்லா தாஸர்கள் இன்றோ
பூசனை செய்தல் நாசத்தையன்றோ
தேசம் சுடுகாடாவது நன்றோ
தெய்வத்தின் பேரால் கொல்வதுமுண்டோ
நேசமறந்து ஆசைமிகுந்து மோசடி புரிபவனாய்-மனிதன்
மாறியதேனய்யா.                     {மாநிலமே}
அன்பே ஆண்டவன் என்று நினைத்தால்
அனைவரும் ஓர்குலமாகவே வாழ்ந்தால்
தனலாய் வெந்தே வீடுகள் விழுமா
தாய்கள் பிரிவால் சேய்கள் அழுமா
சாந்தி சாந்தியெனும் காந்தியின் குரல்கள்
ஓய்ந்திடச் செய்பவனாய்-மனிதன்
மாறியதேனய்யா.                    {மாநிலமே}




No comments:

Post a Comment