Monday, May 14, 2012

வெட்கத்தை உதறினால் விஷயத்தை பரப்பலாம்


தயக்கத்தையும் வெட்கத்தையும்  விட்டால் விஷயங்களை பரப்பலாம்.
 ஒருநாள் திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து   எண்ட் டூ எண்ட் பஸ்ஸில் ஏறி புறப்பட்டு கொஞ்ச தூரம் கடந்ததும்  நாகர்கோவிலுக்கு கண்டகடரிடம் டிக்கட் எடுக்க ரூ 50 எடுத்து கையில் வைத்திருந்தேன். பக்கத்தில் இருந்த பயணி ரூ 100 வைத்திருந்தவர் என்னிடம் உள்ள 50ஐ வாங்கி இரண்டு டிக்கட்டாக எடுத்தார் 45 சில்லறை என்னிடமும் அவரிடமும் இல்லாத்தால். கண்டக்டர் டிக்கட்டுக்கு ரூ 90 போக மீதி ரூ 10 பக்கத்திலிருந்த பயணி என்னிடமே கொடுத்து சில்லறை இருந்தால் கொடுங்க இல்லைன்னா வையுங்க சார் எனச்சொன்னார். என்னிடம் சில்லறை இல்லாத்தால்,நான் வைத்திருந்த பையில் ஏப்ரல் மாத புதிய ஆசிரியன் இதழை எடுத்து அவரிடம் நீட்டி 'சில்லறை இல்லை சார் இத வச்சுக்குங்க இது அருமையான இதழ் சமூக விஷயங்களை அருமையாக அக்கரையோடு பேசும்' என சொல்லி கொடுக்கும் போது ஒரு புன்சிரிப்போடு வாங்கிக்கொண்டு புரட்டிப் பார்த்துவிட்டு தனது பையில் வைத்துவிட்டு எங்கள் அறிமுகத்தைத் தொடர்ந்தோம் அந்த பக்கத்துப்பயணி நாகர்கோவிலில் ஒரு கிளினிக் வைத்திருக்கும் சித்த மருத்துவ இளைஞர்.
          விடைத்தாள் திருத்தும் இடத்தில் மதிய ஓய்வு நேரத்தில்  ஆசிரியர்களிடம் சென்று புதிய ஆசிரியன் இதழை அறிமுகப்படுத்தி சந்தா சேர்ப்பது வழக்கம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேராசிரியரிடம் முயற்சி செய்தேன். அவர் சொன்னார் எனக்கு தமிழ் தெரியாது மலையாளம்தான் தெரியும்சார் ஆனா உங்களுக்காக சந்தா கொடுக்கிறேன் சார் எனச் சொன்னார். சந்தா முக்கியம் இல்ல சார் இதை வாங்கி படிக்கக் மனசுல பதிக்கவேண்டிய சமூக மருந்து சார் பரவாயில்லை என சொல்லிவிட்டு அடுத்த பேராசிரியரிடம் முயற்சியை தொடர்ந்தேன். பேப்பர் திருத்தும்போது மலையாளம் தெரியும் எனச்சொன்ன பேராசிரியர் திருத்திக்கொண்டிருந்த விடைத்தாள் தமிழில் எழுதப்பட்டிருந்தது.எழுதிய மாணவனுக்கோ மாணவனுக்கோ என்ன ஆகுமோ என யோசித்தேன்.              மாத்ததின் ஆரம்ப வாரத்தில் என்னிடம் எப்பவும் புதிய ஆசிரியன் சில செம்மலர் கொஞ்சம் இருக்கும். நான் ஏதாவது துணி தைக்க கொடுக்கும் டெய்லரிடம் கூலி கொடுக்கும்போது இப்புத்தகத்தையும் கணக்கில் சேர்த்துக் கொடுப்பதுண்டு. முடிதிருத்தும் கடைகளில் நான் முடி வெட்டியவுடன் அக்கடைகளிலிலிருக்கும் பல பத்திரிக்கைகளோடு இதையும் போட்டுவிட்டு கொடுக்கும் கூலியில் கழித்துக்கொள்வேன்.கடைக்கார்ரிடம் புத்தகம்பற்றி விளக்கிச சொல்லும்போது அவர் ஏற்றுக்கொள்வார். இப்படி புத்தகம் விற்பதே மிக அலாதியான இன்பமே.

No comments:

Post a Comment